×

1200 கிராம் பறிமுதல்; கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

திருப்பூர், ஏப்.30: திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அஞ்சநேனு (27) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது.

இதையடுத்து அஞ்சநேனுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், நல்லூர் போலீஸ் நிலைய எல்லைப் பகுதியான கோவில் வழியில் கஞ்சா விற்ற காதர் மைதீன் (28), அசாருதீன் (23) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post 1200 கிராம் பறிமுதல்; கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Pattarpalayam ,Pichampalayam ,Anjanenu ,Andhra ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி